R.Tharaniya / 2025 ஜூலை 03 , பி.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
வயது குறைந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை காலி மேல் நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா பரணகம விடுதலை செய்தார்.
குற்றம் சாட்டப்பட்டவரும் பாதிக்கப்பட்டவரும் திருமணமானவர்கள் என்றும் அவர்கள் ஒரு குழந்தையின் பெற்றோர் என்றும் பிரதிவாதி நீதிமன்றத்தில் தெரிவித்தபோது, அவர் விடுவிக்கப்பட்டார்.
2020 ஆம் ஆண்டு சம்பவம் நடந்தபோது அவளுக்கு 14 வயது, அவருக்கு 17 வயது, சம்பவம் தொடர்பிலான மேலதிக நடவடிக்கைகளை நெலுவ பொலிஸார் எடுத்தனர்.
இளம் பெண்,தனது குழந்தையுடன் நீதிபதி முன் ஆஜரானார், குழந்தை அழத் தொடங்கியபோது, நீதிமன்றத்தில் இருந்த ஒரு உறவினரிடம் குழந்தையை ஒப்படைத்து வாக்குமூலம் அளித்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர் தங்கள் திருமணச் சான்றிதழை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். அதன்பின்னரே குற்றஞ்சாட்டப்பட்டவர் விடுதலை செய்யப்பட்டார்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago