2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

துப்பாக்கி ரவைகளுடன் குடும்பஸ்தர் கைது

Editorial   / 2019 ஜூலை 20 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

ஒட்டுசுட்டான் – ஒதியமலைப் பகுதியில், நேற்று, சிறப்பு அதிரடிப் படையினரால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

ஒதியமலைப் பகுதியில் வசித்துவரும் குடும்பஸ்தர் ஒருவரின் வீட்டுக்கு பின்னால் உள்ள காட்டுப்பகுதியில் பை ஒன்றினுள் கட்டப்பட்டு போடப்பட்ட 581 ஏ.கே ரக துப்பாக்கி ரவைகளை மீட்ட சிறப்பு அதிரடிப்படையினர் அந்த வீட்டின் உரிமையாளரான குடும்பஸ்தரை கைதுசெய்துள்ளார்கள்.

இதேவேளை, அதே பகுதியில், 15 கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

இவர்கள் இருவரையும், ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக சிறப்பு அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .