2026 மே 07, வியாழக்கிழமை

தேர்தல் தொடர்பான யோசனை நாளை அமைச்சரவையில்

R.Maheshwary   / 2020 டிசெம்பர் 13 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பான யோசனையொன்றை நாளை (14) அமைச்சரவையில் முன்வைக்கவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான அனுமதியை அமைச்சரவையில் பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

3 வருடங்களுக்கு அதிகமான காலம் மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்பட்டு வருவதால்,  இதனை நடத்துவது தொடர்பான நடவடிக்கைகளை விரைவாக எடுக்குமாறு, ஜனாதிபதியும் பிரதமரும் அறிவித்துள்ளதாகவும் அமைச்சர் ஜனக பண்டார தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, நாளை இணையவழி ஊடாக நடைபெறவுள்ள அமைச்சரவை சந்திப்பில் இந்த யோசனையை முன்வைக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .