2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

‘தேவதாசன் விடயத்தில் மனோ தலையிட வேண்டும்’

Editorial   / 2019 ஜூலை 20 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்   

மகசீன் சிறைச்சாலையில்  உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வரும் முன்னாள் திரைப்படக் கூட்டுத்தாபனத் தலைவரான 62 வயதுடைய கனகசபை தேவதாசனின் விடயத்தில், அமைச்சர் மனோ கணேசனிடம்  தங்களது விடயத்தில் தலையிடுமாறு மகசீன் சிறையில் உள்ள ஏனைய அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 16ஆம் திகதி முதல் உண்ணாவிரதம் இருந்து வரும் இவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக, சிறைச்சாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோட்டை ரயில் நிலையம் குண்டுவெடிப்பில், கடந்த 2007 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட இவருக்கு எதிராக இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு ஒரு வழக்கில் ஆயுள் தண்டனையும், மற்றொரு வழக்கில் 20 வருடங்கள் கடுழீய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

குறித்த இரு வழக்குகளிலும் இவரே தனக்காக வாதாடியிருந்தார். தனது வழக்கில் சாட்சியங்களையும்,  ஆதாரங்களையும் முன்வைப்பதற்காக தனக்கு பிணை வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

இது தொடர்பில்  அவர் தனது கோரிக்களை  எழுத்து மூலம் அதிகாரிகளுக்கு அறிவித்தும் அதற்கான பதில்கள் இதுவரை கிடைக்காத நிலையில் தான் நீதி அமைச்சுக்கு அனுப்பிய கடிதங்கள் சிறை அதிகாரிகளால் அனுப்பி வைக்கப்பட்டதா  என்பது தொடர்பிலும் தனக்கு சந்தேகம் உள்ளதாகவும் குறித்த கைதி தெரிவித்துள்ளார்.

எனவே, அவர் சார்பில் மகசீன் சிறையில் உள்ள ஏனைய அரசியல் கைதிகள், அமைச்சர் மனோ கணேசன் இரவது விடயத்தில் தலையிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .