2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

'நாங்கள் எங்கள் வழியில் செல்வோம்'

Editorial   / 2019 செப்டெம்பர் 01 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி வேட்பாளரை நியமிக்க முடிவு செய்துள்ளது என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

நேற்று (31) ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், ஜனாதிபதித் தேர்தல் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றும், மற்ற கட்சிகள் விரைவாக தங்கள் வேட்பாளரை நிறுத்தியிருந்தாலும் அவசரப்பட ஐக்கிய தேசியக் கட்சி விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.

அத்துடன், “நாங்கள் எங்கள் வழியில் செல்வோம். கவலைப்பட வேண்டாம். நாங்கள் எங்கள் வேலையை கவனித்துக்கொள்வோம். வேட்பாளர் யார் என்பதை நாங்கள் விவாதித்து முடிவு செய்துள்ளோம். காத்திருங்கள்” என்றும் அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .