2025 ஜூலை 05, சனிக்கிழமை

நாட்டின் சில மாவட்டங்களில் கடும் மழை பெய்யும்

Editorial   / 2019 டிசெம்பர் 22 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் சில மாவட்டங்களில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில்  150 தொக்கம் 200 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி எதிர்ப்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அநுராதபுரம், பொலன்னறுவை, திருகோணமலை மற்றும் வவுனியா ஆகிய மாட்டங்களில் இவ்வாறு அதிக மழைவீழ்ச்சி எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், மேல், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்கள், மட்டக்களப்பு, அம்பாறை, நுவரெலியா, மாத்தளை, புத்தளம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் 100 - 150 மில்லிமீற்றர் அளவில் கடும் மழை பெய்யுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மேலும், தென் மாகாணங்கள் மற்றும் கண்டி, குருநாகல், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் 100 மில்லமீற்றர் மழைவீழ்ச்சி எதிர்ப்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .