Simrith / 2025 ஒக்டோபர் 19 , பி.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடு முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக முக்கிய நீர்த்தேக்கங்களில் பல வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகளையும் திறந்து, விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு வினாடிக்கு 5,190 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாக பொல்கொல்ல நீர்த்தேக்கத் தடுப்பணை அலுவலகம் தெரிவித்துள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் தொடர்ந்து பெய்யும் கனமழையால் ஏற்படக்கூடிய வெள்ளப்பெருக்கை நிர்வகிக்க, வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், கலா வாவியின் இரண்டு வான் கதவுகள் தலா இரண்டு அடி உயர்த்தப்பட்டு, கலா ஓயாவிற்கு வினாடிக்கு 3,447 கன அடி வீதம் நீர் வெளியேற்றப்படுகிறது. தம்புலு ஓயா உள்ளிட்ட மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலிருந்து வினாடிக்கு 4,545 கன அடி வீதம் நீர் நீர்த்தேக்கத்திற்கு வந்து கொண்டிருப்பதாக நீர்த்தேக்கத்தின் நீர்ப்பாசன பொறியாளர் தெரிவித்தார்.
மேலும், ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் ஆறு வான் கதவுகள் திறக்கப்பட்டு, வினாடிக்கு 4,990 கன அடி கலா ஓயாவிற்கு வெளியேற்றப்பட்டுள்ளன. அங்கமுவ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகளும் திறக்கப்பட்டு, வினாடிக்கு 2,824 கன அடி அதே ஆற்றில் வெளியேற்றப்பட்டுள்ளன.
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago