Editorial / 2025 டிசெம்பர் 16 , பி.ப. 02:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

நெல் சந்தைப்படுத்தல் சபையால் கொள்வனவு செய்யப்பட்டுள்ள நெல் இருப்பை அரிசியாக்கி சந்தைக்கு விநியோகிக்க கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது
2025 ஆம் ஆண்டு வரவு -செலவுத்திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்டுள்ள 6,000 மில்லியன் ரூபாய்களுக்கு நிதியைப் பயன்படுத்தி நெல் சந்தைப்படுத்தல் சபை கடந்த சிறுபோகத்தில் கொள்வனவு செய்த நெல் இருப்பு நெல் சந்தைப்படுத்தல் சபைக்குச் சொந்தமான களஞ்சியங்களில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சந்தையில் தொடர்ச்சியான அரிசி விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக குறித்த நெல் இருப்பை 2025 ஆம் ஆண்டில் நெல் சந்தைப்படுத்தல் சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள அரிசி ஆலை உரிமையாளர்கள் மூலம் அரிசியாக்கி லக் சதொச மற்றும் கூட்டுறவு வலையமைப்பின் மூலம் சந்தைக்கு விநியோகிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
31 minute ago
36 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
36 minute ago
47 minute ago