2026 மே 19, செவ்வாய்க்கிழமை

dd

நேற்று 148,813 நபர்களுக்கு தடுப்பூசி

J.A. George   / 2021 ஒக்டோபர் 27 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

148,813 நபர்களுக்கு நேற்று (26) கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 548 நபர்களுக்கு வழங்கப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், 4,616 நபர்கள் சினோபார்ம் தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றுள்ளனர். மேலும் 61,551 நபர்களுக்கு இரண்டாவது சினோபார்ம் டோஸ் வழங்கப்பட்டது.

80,990 நபர்கள் ஃபைசர் தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றதுடன், மேலும் 973 நபர்களுக்கு இரண்டாவது ஃபைசர் தடுப்பூசி டோஸ் வழங்கப்பட்டது.

இதேவேளை, 135 பேர் மொடர்னா தடுப்பூசியின் இரண்டாவது டோஸைப் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X