Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 நவம்பர் 02 , மு.ப. 03:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு, சிங்கப்பூருக்குச் சென்றுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், நாளை வியாழக்கிழமை (03), நாடு திரும்புவார் என்று, நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மத்திய வங்கியின் பிணைமுறி மோசடியில் குற்றவாளியாக இணங்காணப்பட்டுள்ள அவர், கடந்த வாரம், சிங்கப்பூருக்குச் சென்றிருந்தார்.
மத்திய வங்கியில் இடம்பெற்றதாகக் கூறப்படும், பிணைமுறிகள் மோசடி விவகாரம் தொடர்பிலான அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் (கோப்) அறிக்கை, நாடாளுமன்றத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் 28ஆம் திகதியன்று சமர்ப்பிக்கப்பட்ட
நிலையில், அதற்கு முன்னைய தினமான 27ஆம் திகதியன்று, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், நாட்டைவிட்டு வெளியேறியிருந்தார்.
இந்நிலையில், நாளை நாடு திரும்பவுள்ள அவரை, விமான நிலையத்தில் வைத்தே கைது செய்யுமாறு, ஒன்றிணைந்த எதிரணியினர் கோரிக்கை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago