Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2025 ஜூன் 20 , பி.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
பஞ்சிகாவத்தை பகுதியில் ஒருவரை துப்பாக்கியால் சுட முயன்ற நபரை விசாரித்த பின்னர், துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த ஒருவர் வியாழக்கிழமை (19) கைது செய்யப்பட்டதாக மருதானை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர்.
சந்தேக நபரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
பஞ்சிகாவத்தை பகுதியில், 13 ஆம் திகதி அதிகாலையில், மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் ஒரு வீட்டின் அருகே இருந்து துப்பாக்கியால் ஒரு நபரைச் சுட முயன்றனர். துப்பாக்கி இயங்கவில்லை, சந்தேக நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
மருதானை பொலிஸாரின் விசாரணைகளைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தடுப்புக்காவல் உத்தரவின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது கிடைத்தத தகவல்களின் அடிப்படையில் விசாரணைகள் தொடங்கப்பட்டன.
மருதானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
21 minute ago
29 minute ago