2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

’பெட்ரோல், டீசல் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம்’

Freelancer   / 2026 மார்ச் 30 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெட்​ரோல், டீசல் தொடர்​பான வதந்​தி​களை நம்ப வேண்​டாம் என்று பிரதமர் நரேந்​திர மோடி அறி​வுறுத்தி உள்​ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மேற்​காசிய போரால் உலகம் முழு​வதும் பெட்​ரோல், டீசலுக்கு பற்றாக்​குறை ஏற்​பட்​டிருக்​கிறது. இந்த சவாலை நாம் திறம்பட எதிர்​கொண்டு வரு​கிறோம். உலகம் முழு​வதும் பல்​வேறு நாடுகளிடம் இந்​தி​யா​வுக்கு நெருங்​கிய நட்​புறவு நீடிக்​கிறது. இதன் மூலம் எரிபொருள் பிரச்​சினையை சமாளித்து வரு​கிறோம். ஒட்​டுமொத்த இந்​தி​யர்​களும் ஒன்​றிணைந்து புதிய சவாலை எதிர்​கொள்ள வேண்​டும்.

போர் விவ​காரத்​தில் முற்​றி​லு​மாக அரசி​யலை தவிர்க்க வேண்டும். இது 140 கோடி மக்​களின் நலன் சார்ந்​தது. இதில் சுயநல அரசி​யலுக்கு ஒரு​போதும் இடம் அளிக்​கக்​கூ​டாது. தற்போதைய சூழலில் வதந்​தி​களை பரப்​புவோர் சொந்த நாட்டுக்கே துரோகம் இழைக்​கின்​றனர்.

இந்​திய மக்​களிடம் ஒரு வேண்​டு​கோளை முன்​வைக்​கிறேன். எரிபொருள் தொடர்​பான (பெட்​ரோல், டீசல்) வதந்​தி​களை நம்ப வேண்​டாம். அரசு நிர்​வாகம் அளிக்​கும் தகவல்​களை மட்​டுமே நம்புங்​கள், அதற்​கேற்ப செயல்​படுங்​கள். கடந்த காலங்​களில் நாம் பல்​வேறு சவால்​களை வெற்​றிகர​மாக எதிர்​கொண்டு உள்ளோம். 140 கோடி இந்​தி​யர்​களின் பலத்​தால் இந்த சவாலிலும் நிச்​சய​மாக வெற்றி பெறு​வோம் என்று குறிப்பிட்டுள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .