Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 11 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
படைப்புழுவின் தாக்கம் கட்டுபடுத்தப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே வழமைப்போல் விவசாயிகள் சோளப் பயிர்ச்செய்கையில் ஈடுபடுமாறும் திணைக்களம் விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
82,000 ஹெக்டயர் நிலப்பரப்பில் செய்கைப் பண்ணப்பட்டிருந்த சோளமானது படைப்புழுவின் தாக்கத்தால் 5 சதவீதமே அழிவடைந்துள்ளதெனவும் தற்போது சேனாவின் தாக்கம் கட்டுபடுத்தப்பட்டுள்ளதெனவும் விவசாயத் திணைக்களத்தின் திட்ட மற்றும் பயிற்சி மத்திய நிலைய பணிப்பாளர் கே.பி. குணரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன் சோள உற்பத்திக்காக புதிய முறைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சோளச் செய்கைகளுக்கிடையில் 4 அடி இடைவெளி இருக்க வேண்டுமென்பதுடன், சோளக் கன்றுகளுக்கிடையில் 30 -45 சென்றிமீற்றர் இடைவெளி இருக்க வேண்டும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளதுடன், இதன்மூலம் படைப்புழுவின் தாக்கத்தை குறைத்துக்கொள்ளலாம் என்றும் விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
2 hours ago
4 hours ago
5 hours ago