2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

பண்டிகைக் காலத்தில் விசேட ரயில் சேவை

Editorial   / 2019 டிசெம்பர் 17 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இன்று (17) முதல் கண்டிக்கு மற்றுமொரு ரயில் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பு – கோட்டையிலிருந்து காலை 9 மணிக்கு பயணத்தை ஆரம்பித்துள்ள ரயில், முற்பகல் 11.30 மணிக்கு கண்டியை சென்றடையும் என, தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ரயில், கம்பஹா மற்றும் பேராதனை ரயில் நிலையங்களில் மாத்திரம் தரித்துநிற்கும் என கூறப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த சொகுசு ரயில் கண்டியிலிருந்து மாலை 4.55 மணிக்கு புறப்படுவதுடன் இரவு 7.30 மணியளவில் கொழும்பை வந்தடையவுள்ளதுடன், ஜனவரி மாதம் 2ஆம் திகதி வரை இந்த விசேட ரயில் சேவையில் ஈடுபடவுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 20, 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் கொழும்பிலிருந்து பதுளைக்கு பேராதனையூடாக விசேட ரயிலொன்று சேவையில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .