2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

’பாதிய’ மரணம்

Janu   / 2025 ஜூலை 15 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலில் காயங்களுடன் பொல்பிதிகமவில் உள்ள ஒரு காட்டில்  குழியில் இருந்து மீட்கப்பட்டு ஒன்பது நாட்களாக சிகிச்சை பெற்று வந்த 'பாதிய' என்ற யானை செவ்வாய்க்கிழமை (15) காலை உயிரிழந்தது.

சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மருத்துவ ஆலோசனையின்படி திங்கட்கிழமை (14) அன்று பாதியவை மறு பக்கம் திருப்பி விடப்பட்டது.

பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் அசோக தங்கோல்லவின் ஆலோசனையின் பேரில், வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் உட்பட்ட  குழு  பாதியவுக்கான அனைத்து சிகிச்சை நடவடிக்கைகளையும் மேற்கொண்டது.

இருப்பினும், பல நாட்களாக உயிருக்கும் மரணத்திற்கும்  இடையில் போராடி வந்த, பாதிய செவ்வாய்க்கிழமை (15) காலை உயிரிழந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .