Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Simrith / 2025 செப்டெம்பர் 24 , பி.ப. 07:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை அரசால் அங்கீகரிக்கப்பட்ட புனித யாத்திரை தலமாக சபரிமலை ஐயப்பன் ஆலயத்தை பிரகடனப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்நிலையில் இதனை இந்திய அரசாங்கத்திற்கு முறையாக அறிவிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் எஸ்.ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.
நீண்டகாலமாக இலங்கையின் இந்து பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் முதலாம் திகதி தொடக்கம் அடுத்த வருடத்தின் ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்தியாவின் கேரளா மாநிலத்தில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் ஆலயத்துக்குச் சென்று தரிசித்து வருகின்றனர்.தற்போது ஆண்டுதோறும் 15,000 இற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்கின்ற யாத்திரை தலமாக இந்த ஆலயம் அமைந்துள்ளது. இன்னும் இரண்டு மாதத்தில் ஐயப்ப சாமிமார்கள் மாலை அணிந்து சபரிமலைக்கு செல்லவுள்ளனர்.
அதற்கமைய, சபரிமலை ஐயப்பன் ஆலயத்துக்கு இலங்கை இந்து யாத்திரிகர்களால் மேற்கொள்ளப்படுகின்ற யாத்திரையை, இலங்கை அரசால் அங்கீகரிக்கப்பட்ட புனித தலயாத்திரையாகப் பிரகடனப்படுத்துவதற்கும் அதற்கான வசதிகளை வழங்கவும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தொடர்ச்சியாக எங்களால் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்களுக்கு அங்கீகாரம் கிடைந்திருந்தது. கொழும்பு நகர சபை உறுப்பினர் ஆனந்தகுமார் குறித்த வேலைத்திட்டத்திற்காக புதிய அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளுக்காக புத்த சாசன மத மற்றும் கலாச்சார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி. பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அதே நேரம் இதற்காக பாடுபட்ட அனைத்து ஐயப்பன் சாமிமார்கள் மற்றும் பக்தர்களுக்கும் இதன் போது நன்றியை தெரிவித்திருந்த நிலையில் இதன் அடுத்தகட்டமாக பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களுடன் இன்றையதினம் (24-09-2025) கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார்.
குறித்த கலந்துரையாடலில் இலங்கை அரசால் அங்கீகரிக்கப்பட்ட புனித யாத்திரை தலமாக சபரிமலை ஐயப்பன் ஆலயத்தை பிரகடனப்படுத்தியதை முறையாக இந்திய அரசிற்கும் , கேரளாவின் சபரிமலை தேவசம் சபைக்கும் அறிவிக்கும் நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் எஸ். ஆனந்தகுமார் அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் அதற்கு கிடைத்த பலன்களை அனைத்து சாமிமார்களும் அனுபவிக்கும் வண்ணம் முறையாக இது தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளதாகவும், இதற்கு நடுவில் எவரும் தங்களது இப் புனிதத்தை சீரழிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
அத்தோடு குரு சுவாமிமார்கள் மற்றும் இம்முறை மாலை அணிந்து சபரிமலைக்கு செல்ல இருக்கும் அனைத்து ஐயப்பன் சுவாமிமார்களுக்கும் எல்லாம் வல்ல ஐயன் ஐயப்பனின் திருவருள் கிடைக்க பிரார்த்திப்பதாகவும் கொழும்பு நகர சபை உறுப்பினர் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.
39 minute ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
5 hours ago
9 hours ago