Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2025 மே 20 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில், இன்று (20) தெரிவித்தார்.
ஜெர்மனி மற்றும் நெதர்லாந்தில் இருந்து ஐபி முகவரிகளை வைத்திருப்பவர்களால் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாக அமைச்சர் விஜேபால கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஐஜிபி தேசபந்து தென்னகோனை கொலை செய்வதற்கான சதித்திட்டம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஐ.டி.எச். சுத்தா என்ற சமன் குமாரவுக்கு ஏற்கனவே ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மேலும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதித்திட்டம் தீட்டப்பட்டதாக கூறப்படும் ஒரு தவறான தகவல் கிடைத்துள்ளதாக அமைச்சர் கூறினார். இது ஒரு பொய்யான கூற்று என்று நிரூபிக்கப்பட்டுள்ளது என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
2 hours ago
5 hours ago