2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

பல்கலைக்கழகம் முன் போதைப்பொருள் விற்றவர் கைது

Editorial   / 2025 ஜூன் 03 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் பல்கலைக்கழகம் ஒன்றுக்கு முன்பாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாலபேயில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றின் முன் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக வலான ஊழல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேக நபரிடம் இருந்து 480 மில்லிகிராம் கொக்கெய்ன், 71 கிராம் குஷ், 850 மில்லிகிராம் மெத்தம்பேட்டமைன் மற்றும் 50 கிராம் ஹஷிஷ் ஆகியவை மீட்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட நபர் கடுவெல, ஹேவாகம பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .