J.A. George / 2022 ஏப்ரல் 01 , மு.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதியின் வீட்டின் முன்னாள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்களால் பேருந்து ஒன்று தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்டுள்ளது.
மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்தின் நுழைவாயிலுக்கு அருகாமையில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து அங்கு ஏராளமானோர் குவிந்த நிலையில், நிலைமையைக் கட்டுப்படுத்த இராணுவும், மற்றும் அதிரடி படையினரால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
அத்தனையும் மீறி போராட்டக்காரர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் படையினரை ஏற்றி வந்த பேருந்து ஒன்று மக்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர மேலதிகமாக பொலிஸ் விசேட அதிரடி படையினர் மற்றும் இராணுவத்தினர் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
8 hours ago
9 hours ago
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
21 Jan 2026