Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 20 , பி.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவருவது தொடர்பில் வெளியான வர்த்மானி அறிவித்தலை இரத்துச்செய்யுமாறு கோரிக்கை விடுத்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் இன்று (20) தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் 27ஆம் திகதி குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சிவில் செயற்பாட்டாளர்களான தம்பர அமில தேரர் மற்றும் பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர ஆகியோரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்துக்கு அமைய, பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் மகாவலி ஆகிய அமைச்சுக்களை மாத்திரம் ஜனாதிபதி தம்வசம் வைத்திருக்க முடியும் என, மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஊடகத்துறைக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் ஒருவர் இருக்கையில் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை ஜனாதிபதிக்கு பெறுப்பான பாதுகாப்பு அமைச்சில் கீழ் கொண்டுவருவது சட்டவிரோதமானது என, அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவருவதாக, வர்த்தமான அறிவித்தல் கடந்த 9ஆம் திகதி நள்ளிரவு வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
26 minute ago
29 minute ago
27 Jun 2025