Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 பெப்ரவரி 28 , பி.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
16 வயதான சிறுமியொருவரை, தேவாலயத்துக்குள் வைத்து, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தென் மாகாண சபை உறுப்பினரான “ரத்தரன்” என்றழைக்கப்படும் கிரிசாந்த புஸ்பகுமார பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
தனது சட்டத்தரணியுடன் சரணடைந்த மேற்படி நபர், பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார். அதன்பின்னர், காலி பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே, பிரதான நீதவான் ஹர்ஷ கெக்குணவெல மேற்கண்டவாறு, இன்று (28) உத்தரவிட்டுள்ளார்.
2,500 ரூபாய் ரொக்கப்பிணையிலும், தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளிலும் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .