2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

‘பிரதம நீதியரசருக்கு கடிதம் அனுப்பவில்லை’

Editorial   / 2018 நவம்பர் 21 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

சபாநாயகர் கரு ஜயசூரியவால் பிரதம நீதியரசருக்கு நேற்றைய தினம் அனுப்பப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ள கடிதம் பொய்யான ஒன்றென  சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

புதிய பிரதமர் மற்றும் அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்காமைக் காரணமாக, நாட்டில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அரசமைப்பின் 37.2 சரத்துக்கமைய பிரதம நீதியரசரின் அனுமதியுடன்  ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரங்கள், முப்படைகளினதும் கட்டளைத் தளபதி  பொறுப்பு  தனக்கு கிடைக்க வேண்டுமெனத் தெரிவித்து பிரதம நீதியரசர் சுனில் பெரேராவுக்கு  சபாநாயகரால் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் கடிதம் ஒன்று சமூகவலைத்தளங்களில்  வெளியிடப்பட்டுள்ள நிலையில், சபாநாயகர் அலுவலகம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

அறிக்கையொன்றை வெளியிட்டே சபாநாயகர் அலுவலகம் இந்த விடயம் தொடர்பில் மறுப்பைத் தெரிவித்துள்ளது.

.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .