2026 மே 14, வியாழக்கிழமை

dd

”பிளவுபடுத்தும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது”

Simrith   / 2024 நவம்பர் 18 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் பிளவுபடுத்தும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

புதிய அமைச்சரவையை நியமித்ததன் பின்னர் ஆற்றிய உரையில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். 

“இலங்கையின் அரசியல் கலாச்சாரம் நீண்ட காலமாக வடக்கை தெற்கிற்கு எதிராகவும் அதற்கு நேர்மாறாகவும் நிறுத்தும் முயற்சிகளால் வரையறுக்கப்படுகிறது. 

“இருப்பினும், பிளவுபடுத்தும் அரசியல் இனியும் ஆட்சி செய்யாது என்பதை இந்தத் தேர்தல் காட்டுகிறது. இது அனைத்து மக்களின் அபிலாஷைகளையும் வெற்றிகரமாக ஒரே மையத்திற்கு கொண்டு வந்துள்ளது,” என்றார். 

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு வாக்களித்த அனைத்து ஆதரவாளர்களுக்கும் ஜனாதிபதி அவர்கள் நன்றி தெரிவித்ததுடன், இலங்கை புலம்பெயர்ந்தோர் மற்றும் இளம் சமூக ஊடக ஆர்வலர்கள் தேர்தலின் போது ஆற்றிய பங்களிப்புகள் மற்றும் ஆதரவினையும் மேற்கோள் காட்டினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .