2026 மே 09, சனிக்கிழமை

dd

புகையிரதத்தில் மோதி பெண் ஒருவர் மரணம்

Freelancer   / 2024 நவம்பர் 10 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹிக்கடுவ, அமரசேன மாவத்தையில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் சென்ற  பெண் ஒருவர் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளார்.

காலியில் இருந்து அளுத்கம நோக்கி நேற்று (09) மாலை பயணித்த புகையிரதத்தில் மோதி குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் வல்பிட்டிமுல்ல, தெவலபொல பிரதேசத்தை சேர்ந்த 66 வயதுடையவராவார்.

பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் கராப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஹிக்கடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .