2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

புத்தளம்- அல்காசிம் பகுதியில் 65 பேர் புணானைக்கு

Editorial   / 2020 ஏப்ரல் 10 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹிரான் பிரியங்க

புத்தளம்- அல்காசிம் சிட்டி மற்றும் பாலாவி பகுதியில், மறைந்திருந்த 65 பேர், புணானையில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்துக்கு நேற்று (09) இரவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனரென, புத்தளம் வைத்திய அதிகாரி சந்ரு பெர்ணான்டோ தெரிவித்தார். 

புத்தளம் அல்காசிம் சிட்டி வீடமைப்புத் திட்டத்தில் வசிக்கும் நபரொருவர் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்ட நிலையில் அண்மையில் இனங்காணப்பட்டார். குறித்த நபருடன் நெருக்கிப் பழகிய 65 பேரே, இவ்வாறு மறைந்திருந்த நிலையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

கொரோனா தொற்றுக்கு இலக்கானவர் இந்தோனேசியாவில் மத நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கடந்த மாதம் 16 ஆம் திகதி நாடு திரும்பியவர் எனத் தெரியவந்துள்ளது.  


   

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .