Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 ஜூன் 17 , மு.ப. 07:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜே.ஏ.ஜோர்ஜ்
பாரதூரமான குற்றவாளிகள் அடைக்கப்பட்டிருக்கும் பூசா சிறைச்சாலையில் கைதிகள் எவரும் அலைபேசி அழைப்புகளை மேற்கொள்ள முடியாதவாறு நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சில் நேற்று (16) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அவர் இதனைக் கூறினார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், “அண்மையில் நீர்கொழும்பு, பூசா உள்ளிட்ட சிறைச்சாலைகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் அதிகளவிலான அலைபேசிகள், சிம் அட்டைகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டிருந்தன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்ததை போல், தேசிய பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத்தை ஒழித்தல் மாத்திரமின்றி வயதானவர்கள் முதல் இன்று பிறந்த சிசு வரையான அனைவரும் அச்சமின்றி, சுதந்திரமாகவும் கௌரவத்துடன் வாழ்வதற்காக சூழ்நிலையை ஏற்படுத்துவதும் தேசிய பாதுகாப்பு என்ற விடயத்துக்குள் வருகின்றது.
இன்று, இந்த நாட்டில் உள்ள மக்கள் போதைப்பொருள் உள்ளிட்ட காரணிகளால் அதிகளவான துன்பத்தை அனுபவிக்கின்றனர். இதனை ஒழித்து மக்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தும் நோக்கில் நாங்கள் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.
போதைப்பொருள் கடத்தல், கப்பம் கோருதல் உள்ளிட்ட பாதாள உலகக்குழு நடவடிக்கைகள், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் உள்ளிட்டவை சிறைச்சாலைகளில் இருந்தே அதிகளவில் முன்னெடுக்கப்படுகின்றன. அங்கிருந்தே இந்த நடவடிக்கைகள் வழிநடத்தப்படுகின்றன.
சிறைச்சாலைகள் நீதியமைச்சின் கீழ் செயற்படுகின்றன. நீதிமன்ற நடவடிக்கையின் ஊடாக அங்கு அடைக்கப்படும் குற்றவாளிகள் உள்ளிட்டகைதிகள் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் கீழ் வருகின்றனர்.
பாதுகாப்பு அமைச்சின் கீழுள்ள அதிகாரிகளுக்கே பாதுகாப்பு செயலாளர் என்ற ரீதியில் எம்மால் உத்தரவினை பிறப்பிக்க முடியும். ஏனைய துறையினருக்கு கட்டளையிட முடியாது. நாங்கள் ஏனைய துறையினருக்கு கட்டளை பிறப்பிப்பது இல்லை.
அவர்களது ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளவே நடவடிக்கை எடுக்கின்றோம். சிறைச்சாலை சுற்றிவளைப்பு உள்ளிட்ட விடயங்களில் துறைக்கு பொறுப்பான அமைச்சிடம் அனுமதிப்பெற்றே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஏனைய அமைச்சுகள் திணைக்களங்களுடன் எமக்கு நல்லிணக்கம் காணப்படுகின்றது.
எந்தவொரு அரச திணைக்களம் அல்லது பிரிவுகளில் நல்லவர்கள் உள்ளதைபோல ஒரு சில மோசமான அதிகாரிகளும் உள்ளனர். இவர்களின் ஆதரவில்லாமல் அலைபேசி உள்ளிட்ட விடயங்கள் சிறைச்சாலைக்குள் செல்வதற்கு இடமில்லை. எனவே, அவ்வாறான அதிகாரிகளை நாங்கள் இனங்கண்டுள்ளோம்.
இவ்வாறான நிலைமையை கருத்தில் கொண்டு அண்மையில் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் பதவியில் மாற்றம் செய்யப்பட்டது.
புதிய ஆணையாளரின் நியமனத்துடன், அண்மையில் பூசா சிறைச்சாலையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 61 அலைபேசிகள் மற்றும் சிம் அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அங்கு 79 சி.சி.டிவி கமெராக்கள் இருந்தாலும் அவைகளில் சில மாத்திரமே செயற்பாட்டில் இருந்தன. இவ்வாறான குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாங்கள் அங்கு சென்ற போது, அங்கு பாதுகாப்பு குறைவாக உள்ளதை உணர்ந்து விசேட அதிரடிப்படையினரை ஈடுபட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது நூற்றுக்கும் அதிகமான விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
விசேட அதிரடிப்படையினர் அங்கு வெளிப்புற பாதுகாப்பு நடவடிக்கையில் மாத்திரமே ஈடுபடுகின்றனர். அவர்கள் சிறைச்சாலை உள்ளக நடவடிக்கையில் ஈடுபடுவதில்லை, நிலைமையை உணர்ந்து திறமையான, பயப்படாத அதிகாரியொருவர் அங்கு தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.
பூசா சிறைச்சாலையில் இருந்து கைதிகள் எந்தவொரு வகையிலும் அலைபேசி, அழைப்புகளை தற்போது மேற்கொள்ள முடியாது. அவ்வாறான வகையில் அங்கு அலைபேசி ஜாமர்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன.
இனிமேல், அங்கு அடைக்கப்பட்டுள்ள கைதிகளால் வெளியில் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பாதாள உலகக்குழு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத நிலையை உருவாக்கியுள்ளோம்.
இதேபோல, இன்னும் இரண்டொரு நாள்களில் அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் இருந்தும் அலைபேசி அழைப்புகளை மேற்கொள்ள முடியாத வகையில் உபகரணங்களை பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் என்பது பாரிய வலையமைப்புடன் தொடர்புடையது, அதனை அடையாளம் கண்டு ஒழிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
உதாரணமாக அரிசி ஆலை உற்பத்தியாளர்கள் அரிசி உற்பத்தியை குறைத்தால் அல்லது நிறுத்தினால் கொழும்பு உள்ளிட்ட பிரதான சந்தைகளில் அரிசி பற்றாக்குறை ஏற்பட்டு அதன் விளைவால் விலை அதிகரிக்கும்.
எனினும், நாங்கள் எவ்வளவு போதைப்பொருளை நூற்றுக்கணக்கான கிலோகிராம் தொகையாக கைப்பற்றினாலும், நாங்கள் அறிந்த வரை போதைப்பொருளின் விலை அதிகரிப்பதில்லை. அவ்வாறு என்றால், போதைப்பொருள் சந்தையில் பற்றாக்குறை ஏற்படாத அளவிலான தொகை கையிருப்பில் இருக்க வேண்டும்.
எனவேதான் போதைப்பொருள் வியாபாரம் என்பது பாரிய வலையமைப்புடன் தொடர்புள்ளதாக நாங்கள் நினைக்கின்றோம்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
2 hours ago