2025 ஜூன் 26, வியாழக்கிழமை

பெண் நோயாளி உயிரிழப்பு; விசாரணைகள் ஆரம்பம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 19 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

வைத்தியசாலையின் ஐந்தாவது மாடியிலிருந்து கீழே பாய்ந்து 28 வயதுடைய பெண் நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பொரலஸ்கமுவ வெரஹெர, போதனா வைத்தியசாலையில் நேற்று மாலை 6.45 மணியளவில் பெண் நோயாளி ஒருவர் வைத்தியசாலையின் ஐந்தாவது மாடியில் இருந்து கீழே பாய்ந்து உயிரிழந்திருந்தார்.

குறித்த வைத்தியசாலையில் மனநோய் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த பன்னிப்பிட்டிய பகுதியை சேர்ந்த பெண் ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்திருந்தார்.

சடலம் அதே வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மரண விசாரணைகள் இன்றைய தினம் இடம்பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .