Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஓகஸ்ட் 11 , பி.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொரளை, சஹஸ்புராவில் உள்ள சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட முதல் சந்தேக நபரை 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க, சம்பவத்திற்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படும் மேலும் மூன்று சந்தேக நபர்களை 24 மணி நேரம் பொலிஸ் காவலில் வைக்க அனுமதி வழங்கினார்.
சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு குற்றப்பிரிவு விடுத்த கோரிக்கையை பரிசீலித்த பின்னர் இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
மூன்று நாள் தடுப்புக்காவல் உத்தரவு மற்றும் விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் முதல் சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
கடந்த 7 ஆம் திகதி இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், காயமடைந்த ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், மூன்று பேர் இறந்ததாகவும் கொழும்பு குற்றப்பிரிவு நீதிமன்ற சமர்பணத்தில் தெரிவித்துள்ளது
9 minute ago
10 minute ago
12 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
10 minute ago
12 minute ago
1 hours ago