2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

போலி நாணயத்தாள்களை அச்சிட்ட நபர் கைது

Editorial   / 2019 பெப்ரவரி 03 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமாக அச்சிடப்பட்ட போலி நாணயத்தாள்களுடன் நபரொருவர் தனமல்வில பிரதேசத்தில் வைத்து நேற்று (02) கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் குறித்த பிரதேசத்தில் அமைந்துள்ள வியாபார நிலையமொன்றுக்கு இந்த போலி நாணயத்தாள்களை வழங்கிய வேளை, வியாபார நிலையத்தின் உரிமையாளர் குறித்த நாணயத்தாள்கள் தொடர்பில் சந்தேகத்தில் கேள்விகளை கேட்டபோது சந்தேகநபர் உடனடியாக குறித்த போலி நாணயத்தாள்களை கிழிக்க முற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து, அங்கு விரைந்த பொலிஸார், குறித்த பகுதியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டிருந்த போலி நாணயத்தாள்கள் அச்சிடும் இடமொன்றை கண்டறிந்து அதனை சுற்றிவளைத்துள்ளதாகவும், பின்னர் அங்கிருந்து ஸ்கேனர் ஒன்றையும், 1000 ரூபாய் தாள்கள்  எட்டும், 5000 ரூபாய் தாள்கள் எட்டும் மீட்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.

குறித்த சந்தேகநபரை கண்டறிந்து கைது செய்த பொலிஸார், இன்று (03) வெல்லவாய நீதிமன்றத்தில் குறித்த நபரை ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டதாக மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .