Editorial / 2019 செப்டெம்பர் 09 , பி.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் வைத்தியர் போன்று தன்னை அடையாளப்படுத்தி சுற்றித்திரிந்த நபரொருவர், வைத்தியசாலை பொலிஸாரால், நேற்று (09) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்தபோது, குறித்த நபரிடம் தினக்குறிப்பு புத்தகம் ஒன்றும், அலைபேசியும் இருந்ததாக, பொலிஸார் தெரிவித்தனர்.
25 வயதுடைய குறித்த நபர், திக்வெல்ல- பதீகம பிரதேசத்தைச் சேர்ந்தவரென தெரியவந்துள்ளது. கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக, காலி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
காலி பொலிஸார், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
13 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
26 minute ago