Editorial / 2018 ஜூலை 30 , பி.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை மாற்றம் தொடர்பில் பொய்யான தகவல்களை உள்ளடக்கி, நிதி மோசடி செய்ததாக குற்றம்சாட்டி பத்திரிகை விளம்பரம் வெளியிட்டமை தொடர்பில், தற்போதைய நிதி அமைச்சுக்கு எதிராக கொழும்பு உயர்நீதிமன்றித்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஒன்றிணைந்த எதிரணியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதோடு, நிதியமைச்சர் மங்கள சமரவீர மற்றும் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் சிலர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
எரிபொருள் விலை நிர்ணயம் தொடர்பில் நிதி அமைச்சினால் வெளியிடப்பட்ட இந்த விளம்பரம் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழி பத்திரிகைகளில் வெளியிடப்பட்டிருந்ததாகவும், கடந்த அரசாங்கத்தின் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலைமாற்றம் தொடர்பில் அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த பொய்யான தகவல்கள், பொது மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் அமைந்திருப்பதாகவும் பந்துல குணவர்தன அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
2 hours ago
6 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
7 hours ago
7 hours ago