Editorial / 2025 மார்ச் 25 , பி.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷவும் அவரது மனைவியும் கொம்பனி வீதி பொலிஸ் நிலையத்திற்கு, வருகைதந்துள்ளார். கொம்பனி வீதி பொலிஸ் பிரிவிலுள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் அளிக்கவே இவ்விருவரும் வந்துள்ளனர்.
ஒரு இரவு விடுதியில் ஒருவர் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் தொடர்பாக கொம்பனி வீதி பொலிஸாரினால் நடத்தப்படும் விசாரணை தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக வந்துள்ளனர்.
இதேவேளை, அந்த சம்பவத்துக்கும் யோஷித ராஜபக்ஷவுக்கும் இடையில் எவ்விதமான தொடர்பும் இல்லையென, பொலிஸார், திங்கட்கிழமை (24) அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
10 minute ago
07 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
07 May 2026