Editorial / 2026 ஏப்ரல் 06 , பி.ப. 12:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஒவ்வொரு பொலிஸ் பிரிவிலும் உள்ள மின்சார விளம்பரப் பலகைகள் மற்றும் தேவையற்ற முறையில் எரியும் வீதி விளக்குகள் தொடர்பில் கணக்கெடுப்பு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அனைத்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும் (OIC) மற்றும் உயர் அதிகாரிகளுக்கும் பணித்துள்ளார்.
இது தொடர்பான முக்கிய விபரங்கள் பின்வருமாறு:
காட்சிப்படுத்தப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளில் உள்ள மின் குமிழ்கள் மற்றும் தேவையற்ற முறையில் எரியும் வீதி விளக்குகளின் எண்ணிக்கையை துல்லியமாகக் கணக்கிட்டு தனக்கு அறிக்கை வழங்குமாறு பொலிஸ் மா அதிபர் பணித்துள்ளார்.
பொலிஸ் மா அதிபரின் கட்டளைப் பிரிவினால் வழங்கப்பட்டுள்ள இந்த உத்தரவு, பிராந்தியப் பிரிவுகளுக்குப் பொறுப்பான அதிகாரிகள், மாவட்டப் பொறுப்பதிகாரிகள், தலைமையகப் பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் மற்றும் எரிசக்தி பயன்பாட்டைச் சிக்கனப்படுத்துமாறு அரசாங்கம் வழங்கியுள்ள வழிகாட்டல்கள் முறையாகச் செயற்படுத்தப்படாத காரணத்தினாலேயே இந்த அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
6 minute ago
26 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
26 minute ago
2 hours ago