Freelancer / 2026 ஏப்ரல் 28 , பி.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாலைதீவு ஜனாதிபதி வைத்தியர் முகமது முய்சு எதிர்வரும் மே மாதம் 3 ஆம் திகதி இலங்கை வரவுள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் இலங்கை வரவுள்ள அவர் மே 3 முதல் 5 வரை நாட்டில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக பல்வேறு துறைகளை உள்ளடக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடவுள்ளார்.
பயிற்சித் திட்டங்களை ஏற்பாடு செய்தல், பணியாளர் பரிமாற்றத் திட்டங்களைச் செயல்படுத்துதல் மற்றும் கூட்டு ஆராய்ச்சி நடத்துதல் தொடர்பாக மாலைதீவு குடியரசின் பாதுகாப்பு மற்றும் தேசிய சேவைகள் அமைச்சிற்கும் இலங்கையின் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்,
மாலைதீவு குடியரசின் சுகாதாரம், குடும்பம் மற்றும் நல்வாழ்வு அமைச்சுக்கும், இலங்கையின் கொழும்புப்பல்கலைக்கழகத்திற்கும் இடையேயான கல்விசார் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம், மாலைதீவு குடியரசுக்கும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசுக்கும் இடையேயான சுற்றுலாத் துறையில் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளிட்ட பல முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன. R
1 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
6 hours ago