2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

மழையுடனான வானிலை தொடரும்

Editorial   / 2019 செப்டெம்பர் 13 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை எதிர்வரும் சில நாட்களுக்கும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மற்றும் வடக்கு ஆகிய மாகாணங்களில் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும்.

இதன்போது, சில பிரதேசங்களில் 75 மில்லிமீற்றர் வரையில் மழை எதிர்பார்க்கப்படுவதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான மற்றும் புத்தளம் முதல் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 50 முதல் 55 கிலோமீற்றர் வேகத்தில் அதிகரித்து வீசக்கூடும் எனவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .