Editorial / 2026 மே 01 , பி.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்
மவுசாக்கலை நீர்த்தேக்கத்தில் வயது முதிர்ந்த பெண் ஒருவரின் சடலம் மிதப்பதைக் கண்ட பொதுமக்கள், அது குறித்து இன்று (01) மாலை 4 மணியளவில் மஸ்கெலியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
தகவலையடுத்து, மஸ்கெலியா பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
நீர்த்தேக்கத்தில் சடலமாக மீட்கப்பட்டவர், காட்டு மஸ்கெலியா தோட்டத்தைச் சேர்ந்த 86 வயதுடைய சுப்பிரமணியம் லெட்சுமி என அவரது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஹட்டன் நீதவான் சம்பவ இடத்திற்கு வருகை தந்து சடலத்தைப் பார்வையிட்ட பின்னர், மரணப் பரிசோதனைகளுக்காக சடலம் கிளங்கன் டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படவுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago