ஆர்.மகேஸ்வரி / 2018 மார்ச் 26 , பி.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
சமூக வலைத்தளம் ஊடாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையில் செயற்பட்டதாகக், கூறி கைதுசெய்யப்பட்ட மாணவனை எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர், இன்றைய தினம் கொழும்பு மேலதிக நீதவான் சானிமா விஜேபண்டார முன்னிலையில், ஆஜர்படுத்தப்பட்ட போதே, நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் குறித்த மாணவன் கண்டியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களையடுத்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
35 minute ago
50 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
50 minute ago
2 hours ago