R.Tharaniya / 2025 ஒக்டோபர் 26 , பி.ப. 03:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
காத்தான்குடியில் காணாமல் போன முதியவர் ஒருவரின் தலைப் பகுதி காத்தான்குடி வாவியில் இருந்து சனிக்கிழமை (25) மாலை மீட்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி 6 இல் வசிக்கும் 66 வயதுடைய அப்துல் ராசிக் எனும் முதியவர் வெள்ளிக்கிழமை (23) அன்று காலை 8:30 மணிக்கு வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் திரும்ப வீடு வந்து சேராததால் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்து அவரை தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன.
அதற்கமைய குறித்த முதியவரின் சடலத்தின் தலைப் பகுதி காத்தான்குடி 5 இல் உள்ள வாவியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது .
இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் மீட்கப்பட்ட தலைப்பகுதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
குறித்த நபரை வாவிக்கரையோரம் உள்ள முதலை இழுத்துச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

எம். எஸ். எம். நூர்தீன்
29 minute ago
31 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
31 minute ago
58 minute ago