Editorial / 2025 மார்ச் 16 , பி.ப. 03:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னாரில் இருந்து கொழும்புக்கு பேருந்தில் பயணித்த சந்தேக நபர் ஒருவர், மக்காச்சோளப் பையில் மறைத்து வைக்கப்பட்டு விற்பனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்ட பெறுமதியான விநாயகர் சிலையை முருக்கன் பகுதியில் சனிக்கிழமை (15) கைது செய்ததாக முருக்கன் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் 36 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் இந்த விநாயகர் சிலையை மக்காச்சோளம் நிரப்பப்பட்ட பையில் கவனமாக மறைத்து வைத்து கொழும்பு பகுதிக்கு விற்பனை செய்வதற்காக எடுத்துச் சென்றதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சிலை தங்கமா என்பதை சரிபார்க்க சந்தேக நபர் சிலையின் மூக்கு மற்றும் கைகளை உடைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபரிடம் மேலும் விசாரித்தபோது, அவர் தனது மாமாவிடமிருந்து சிலையைப் பெற்றதாகக் கூறினார் எனத் தெரிவித்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.
42 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
57 minute ago
1 hours ago