R.Maheshwary / 2020 டிசெம்பர் 27 , பி.ப. 02:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியை முகாமைத்துவத்துடன் பயன்படுத்த வேண்டுமென,நிதியமைச்சால் சகல அரச நிறுவனங்களின் பிரதானிக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆரட்டிகலவின் கையெழுத்துடன் இது தொடர்பான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில், வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதிக்கு அப்பால், நாடாளுமன்றத்தின் அனுமதியில்லாமல் நிதி எதனையும் ஒதுக்கீடு செய்ய முடியாதென நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக ஒதுக்கப்பட்ட நிதியின் முக்கியதுவத்தை கவனத்தில்கொண்டு, அதனை பயன்படுத்துவது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த ஆலோசனைக்கு அப்பால் நிதி செலவு செய்யப்படுமாயின், அதன் முழுமையான பொறுப்பை அந்தந்த நிறுவனங்களின் கணக்காய்வு அதிகாரிகளே ஏற்க வேண்டுமென நிதியமைச்சு அறிவித்துள்ளது.
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago