2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

மேலும் 10 இடங்கள் முடக்கம்

S. Shivany   / 2020 டிசெம்பர் 17 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட் 19 தொற்று காரணமாக மேலும் சில  பகுதிகள் இன்று(17) காலை 6.00 மணிமுதல் முடக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சில பகுதிகளும் மொனராகலை மாவட்டத்தின் கிராம அலுவலர் பிரிவொன்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் மூன்று பிரதேசங்களும்,  அட்டாளைச்சேனை பொலிஸ் பிரிவில் மூன்று பிரதேசங்களும், ஆலையடிவேம்பு பொலிஸ் பிரிவில் மூன்று பிரதேசங்களும் முடக்கப்பட்டுள்ளன.

அத்துடன், மொனராகலை மாவட்டத்தின் அலுபொத கிராம சேவகர் பிரிவும் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .