Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 12 , பி.ப. 08:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானதும் மேலும் 123-ஆல் இன்று அதிகரித்துள்ளது.
புதிதாக அடையாளங்காணப்பட்ட கொவிட்-19 தொற்றாளர்கள் அனைவரும் பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்புடைய முன்னைய தொற்றாளர்களின் நெருங்கிய தொடர்பாளர்கள் ஆவர்.
அந்தவகையில், குறித்த தொற்றுக்களுடன் மினுவாங்கொட-பேலியகொட கொத்தணி தொற்றுக்களின் எண்ணிக்கையானது 28,502-ஐ எட்டியுள்ளது.
இந்நிலையில், இன்று மட்டும் இலங்கையில் 755 கொவிட்-19 தொற்றுக்கள் பதிவான நிலையில், இலங்கையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 32,130-ஆக காணப்படுகின்றது.
முன்னதாக, 473 பேர் கொவிட்-19-இலிருந்து குணமடைந்த நிலையில், மொத்தமாக 23,304 பேர் குணமடைந்துள்ளனர். எவ்வாறெனினும், 8,679 பேர் இன்னும் மருத்துவக் கண்காணிப்பிலுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .