2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

மேலும் 23 பேருக்கு கொரோனா உறுதி

S. Shivany   / 2020 நவம்பர் 11 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

போகம்பர சிறைச்சாலை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் 23 கைதிகளுக்கு, கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை, பிசிஆர் பரிசோதனை மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேற்படி கைதிகள் நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், வேறு சிறைச்சாலைகளில் இருந்து போகம்பரைக்கு மாற்றப்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

போகம்பர சிறைச்சாலையில் இதற்கு முன்னர் சிறைக்காவலர்கள் இருவரும், கைதிகள் எழுவரும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X