Freelancer / 2021 ஜூலை 24 , பி.ப. 07:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் மேலும் 487 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதன்படி, இன்றையதினத்தில் 1,707 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் பாதிக்கப்பட்ட மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 294,333 பேராக அதிகரித்துள்ளது.
அத்துடன், இன்றைய தினத்தில் மேலும் 957 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 266,665 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதுடன் 23,709 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 26 ஆண்கள், 26 பெண்கள் உட்பட 52 பேர், நேற்றைதினம் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்திருந்தது.
அதன் அடிப்படையில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 4,054பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
4 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
21 Dec 2025