Editorial / 2020 மே 02 , மு.ப. 10:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊரடங்கு சட்டம் காரணமாக தமது வீடுகளுக்கு செல்ல முடியாமல் மேல் மாகாணத்தில் சிக்கியிருந்த நபர்களை தமது ஊர்களுக்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகின்றது.
முதலாவது கட்டமாக, களனி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சிக்கியுள்ள கர்ப்பிணி தாய்மார்கள், நீண்ட கால நோயாளர்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட தரப்பினரை அவர்களது ஊர்களுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து நபர்களும் வைத்திய பரிசோதனையின் பின்னரே தமது ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்படுவர்.
அவர்களை அழைத்துச் செல்வதற்கு பொலிஸ் பாதுகாப்புடன் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 minute ago
51 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
51 minute ago
59 minute ago