2025 ஜூன் 09, திங்கட்கிழமை

மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலி

George   / 2016 ஓகஸ்ட் 11 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாவனெல்லை பெலிகம்மன பிரதேசத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் இளைஞர் இருவர் பலியாகியுள்ளனர்.

கண்டி நோக்கிப் பயணித்த  மோட்டார் வாகனம், முன்னால் வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் மாவனெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளனர்.

உடுமுல்ல, மானெல்லை பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இரண்டு இளைஞர்களே இந்த விபத்தில் பலியாகியுள்ளனர்.

விபத்தையடுத்து, தப்பிச்சென்ற மோட்டார் வாகனத்தின் சாரதியை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக மாவனெல்லை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .