Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Kogilavani / 2016 ஓகஸ்ட் 11 , மு.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜே.ஏ.ஜோர்ஜ்
'காணாமல் போனோரை கண்டறியும் அலுவலகத்தை அமைப்பதற்காக, தகவல் அறியும் திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில், இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், அது பொதுமக்களின் தகவலறியும் உரிமையை இல்லாது செய்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த உள்ளிட சிலர் கூறுவது தவறான கருத்து' என ஊடக பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதாரன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில்,
'காணாமல் போனோரை கண்டறியும் அலுவலகத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த அலுவலகத்தில் சாட்சியமளிக்கும் சாட்சிகள், முறைப்பாடுகளை மேற்கொள்வோர் கொடுக்கும் தகவல்களை பாதுகாக்கும் வகையிலேயே இந்த திருத்தச் சட்டமூலத்தில் சில பிரிவுகள் இணைக்கப்பட்டுள்ளன.
முறைப்பாடுகளை மேற்கொள்வோரை பாதுகாக்க வேண்டும், முறைப்பாடு செய்பவர்கள் தாம் வழங்கும் தகவல்கள் வெளியே தெரிவதை விரும்ப மாட்டார்கள். எனவே அவர்களை பாதுகாக்கவே இதனை நாம் செய்கின்றோம். அதனைத்தவிர, இந்த அலுவலகத்தின் ஏனைய சகல நடவடிக்கைகள் தொடர்பில் நாம் அறியத்தருவோம். அது குறித்த தகவல்களை பெறுவதில் எந்த சிக்கலும் இல்லை' தற்போதுள்ள தகவலறியும் சட்டமூலத்துக்கு எதிராக நாம் எதனையும் செய்யவில்லை' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
16 minute ago
1 hours ago
2 hours ago