2025 மே 12, திங்கட்கிழமை

யாழில்.முள்ளிவாய்க்கால் கஞ்சி

R.Tharaniya   / 2025 மே 12 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் யாழ்ப்பாணத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து இன்று திங்கட்கிழமை (12) முதல் எதிர்வரும் மே 18ம் திகதி வரை வடக்கு கிழக்கு தமிழர் தாயகமெங்கும் பயணித்து முள்ளிவாய்க்கால் கஞ்சியினை வழங்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது.

இதன் முதல் நிகழ்வு வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இல்லத்திற்கு அருகில் உள்ள ஆலடி பகுதியில் இடம்பெற்றது.

பல்கலைக்கழக மாணவர்களால் அப்பகுதி மக்களிடம் அரிசி சேகரிக்கப்பட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்கப்பட்டு சிரட்டையில் பொதுமக்களுக்கும் வீதியில் சென்றவர்களுக்கும் வழங்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வார காலப்பகுதியில் துக்க தினமாக தமிழ் மக்கள் அனுஷ்டிக்க வேண்டும்.  கேளிக்கை ரீதியான நிகழ்வுகளையோ நினைவுகூறல் அவமதிக்கும் வகையில் செயற்பாடுகள் இந்த காலப்பகுதியில் தமிழ் மக்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இதன்போது கோரிக்கை விடுத்தது.

நிதர்சன் வினோத்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X