2025 ஜூன் 28, சனிக்கிழமை

யானைகள் உயிரிழப்பு; விசாரணை அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 29 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹபரணை – திகம்பதஹ – ஹிரிவடுன்ன வனப்பகுதியில் 7 யானைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அறிக்கை ஒன்றை நாளைய தினத்திற்குள் சமர்ப்பிக்குமாறு வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டாரவுக்கு வனஜீவராசிகள் அமைச்சு, அறிவித்துள்ளதா இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் அலுவிஹார தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்தச் சம்பவம் தொடர்பில் இராணுவத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், பரிசோதனை அறிக்கையை நாளை மாலை வேளைக்குள் சமர்ப்பிக்குமாறு பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

“யானைகள் உயிரிழந்துள்ளமை தொடர்பில் கேள்விகள் எழுந்துள்ளன. இந்த யானைகள் கலாவெவ பகுதியிலிருந்தே இங்கு வருகை தந்துள்ளன. இவை இங்குள்ள யானைகள் இல்லை, ஆராய்ந்து எமக்கு தகவல் வழங்குவதற்கு இராணுவத்தினரையும் ஈடுபடுத்தியுள்ளோம். இராணுவத்தின் அறிக்கையும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் அறிக்கையும் எமக்கு கிடைக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.

ஹபரணை, திகம்பதஹ, ஹிரிவடுன்ன வனப்பகுதியில் நேற்று மாலை வரை 7 யானைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், இன்றும் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

தும்பிகுளம் வனப்பகுதியின் சில பகுதிகளில் உயிரிழந்த நிலையில், 4 பெண் யானைகளின் உடல்கள் நேற்று முன்தினம் காலை கண்டுபிடிக்கப்பட்டன. இதனையடுத்து, மேலும் 3 பெண் யானைகளின் உடல்கள் நேற்று கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.

பெண் யானைகள் மரணத்திற்கான காரணத்தை உறுதியாகக் கூற முடியாது என வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.

யானைகளின் உடற்பாகங்கள் அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு அனுப்பப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .