2025 ஜூன் 28, சனிக்கிழமை

ரணில் - சம்பந்தன் இன்று பேச்சு

Editorial   / 2019 செப்டெம்பர் 17 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்க,  இன்று (17) பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில்  பிற்பகல் நேரத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளது.

இதேவேளை, அது தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்தும் கலந்துரையாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்புக்கு முன்னதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் பிற்பகல் 3 மணியளவில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .